என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
- 2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி, பூத் கமிட்டி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், இன்றும் நாளையும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது.
இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
2 நாட்கள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி, பூத் கமிட்டி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
82 மாவட்டங்களில் முதலில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். பூத் கமிட்டி பணிகள் தாமதம் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.






