என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - பேருந்து ஓட்டுநர் கைது
- பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பேருந்தை இயக்குவதற்கு முன்பாக உரிய முறையில் சோதனை செய்யத் தவறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story






