என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

45 சவரன் நகைகள் ஒப்படைப்பு... தூய்மை பணியாளர் பத்மாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு!
- நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டியுள்ளார்.
சென்னையில் தியாகராய நகர் பகுதியில், தூய்மை பணியாளர் பத்மா என்பவர் நேற்று குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவர் சாலையில் தங்க நகைகள் கிடப்பதை பார்த்துள்ளார். பின்னர் தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைக்க விரும்பிய பத்மா, பாண்டி பஜார் காவல்நிலையம் சென்று, அதனை காவலர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
அதனை போலீசார் மதிப்பிட்டத்தில் 45 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்மதிப்பு ரூ.45 லட்சம். பின்னர் அந்த நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் பத்மாவின் நேர்மையை பாராட்டி அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்த செய்தி இணையத்தில் வெளிவர பலரும் பத்மாவை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டியுள்ளார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுத்தொகையாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையையும் வழங்கியுள்ளார்.






