என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2025 புத்தாண்டு- இந்து கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
- இன்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளது.
- போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:
2024-ம் ஆண்டு இன்று நிறைவு பெறுகிறது. இன்று நள்ளிரவு 2025 புத்தாண்டு பிறக்கிறது.
2025-ல் செல்வம், வெற்றி, திருமணம் உள்பட முக்கிய நிகழ்வுகள், பிரார்த்தனைகள் அனைத்தும் எந்தவித தடையுமின்றி நிறைவேற வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகவும், கனவாகவும் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அதன்படி இன்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று இரவு வழிபாட்டு தலங்களில் திரள்வார்கள் என்பதால் அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்பு கம்புகள் கட்டி வைத்துள்ளனர்.
போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.






