என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நெல்லையில் பயங்கரம்- தலை துண்டித்து வாலிபர் படுகொலை
- சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
- உடல் மற்றும் தலையை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
நெல்லை தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் பகுதியில் இன்று காலை ஒரு வாலிபர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அங்கு அவரது உடல் மட்டும் கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரின் தலையை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிறிது தூரத்தில் தலை வீசப்பட்டிருந்தது. தொடர்ந்து உடல் மற்றும் தலையை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதி குறிச்சிகுளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் வெள்ளியப்பன் என்ற துரை (வயது 30) என்பது தெரியவந்தது.
இவர் வெளியூரில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஊரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று ஊர் திரும்பினார். இந்நிலையில் இன்று காலை அவரை மர்ம கும்பல் தலை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த ஒருவரது மனைவிக்கும் வெள்ளியப்பனுக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்