search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொறுப்பு யார் கேட்டது? பொங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.
    X

    பொறுப்பு யார் கேட்டது? பொங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.

    • மற்ற பொறுப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
    • தந்தை ஆரூண் ஏற்கனவே எம்.பி.யாக வெற்றி பெற்றவர் தற்போது வயது முதிர்வு காரணமாக அவர் போட்டியிடவில்லை.

    காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பபட்டுள்ள பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களில் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா திருவள்ளூர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மற்ற பொறுப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். ஆனால் அசன் மவுலானா 'நான் பொறுப்பாளர் பதவியே கேட்கவில்லையே. நான் எம்.பி. தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு கட்சி மேலிடம் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களிடம் பொங்கி இருக்கிறார். தேனி தொகுதியில் இவரது தந்தை ஆரூண் ஏற்கனவே எம்.பி.யாக வெற்றி பெற்றவர் தற்போது வயது முதிர்வு காரண மாக அவர் போட்டியிடவில்லை. எனவே அந்த தொகுதியை கைப்பற்றும் முடிவில் அசன் மவுலானா உறுதியாக இருக்கிறார்.

    இன்னும் 2½ ஆண்டுகள் எம்.எல்.ஏ பதவி இருக்கிறதே வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு ஏற்கனவே அந்த மாதிரி வாய்ப்பு வழங்கிய நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன என்றார்.

    Next Story
    ×