search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபையில் நடந்தது என்ன?: கவர்னர் மாளிகை விளக்கம்
    X

    சட்டசபையில் நடந்தது என்ன?: கவர்னர் மாளிகை விளக்கம்

    • கவர்னரின் அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.
    • உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை கவர்னர் சட்டசபையில் அமர்ந்திருந்தார்.

    சென்னை:

    சட்டசபை விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    * அரசின் உரை தவறானதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தது.

    * தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக முன்கூட்டியே அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    * கவர்னர் உரை என்பது அரசின் கொள்கை, சாதனைகளாக இருக்க வேண்டும். அரசியல் கருத்தாகவோ தவறாகவோ இருக்க கூடாது.

    * கவர்னரின் அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.

    * அரசிடம் இருந்து கவர்னர் உரைக்கான அறிக்கையானது பிப்.9-ந்தேதி கிடைத்தது.

    * உரையில் ஏராளமான பத்திகள் தவறானதாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தன.

    * தேசிய கீதம் தொடக்கத்திலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    * சட்டசபையில் முதல்வர், சபாநாயகர், உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு திருக்குறளையும் கவர்னர் வாசித்தார்.

    * அவைக்கு மரியாதை அளித்ததோடு, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

    * அரசியலமைப்பு சட்டப்படி அதற்கு மேலாக, கவர்னரால் உரையை வாசிக்க முடியவில்லை.

    * உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை கவர்னர் சட்டசபையில் அமர்ந்திருந்தார்.

    * சபாநாயகர் தனது உரையை முடித்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும் என கவர்னர் எழுந்தார்.

    * ஆனால் அவை நடவடிக்கைக்கு மாறாக கோட்சே உள்ளிட்ட பெயர்களை சபாநாயகர் வாசிக்க தொடங்கினார்.

    * சபாநாயகரின் பேச்சானது அவரின் பதவியின் மாண்புக்கும், அவை மரபுக்கும் பொருத்தமானதாக இல்லை.

    * சபாநாயகரின் செயல்பாடு, அவையின் மாண்பை குறைத்துவிட்டது.

    * அவை மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் கவர்னர் வெளியேறினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×