என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தாயுடன் மொபட்டில் சென்ற பள்ளி மாணவி தண்ணீர் லாரி மோதி பலி
- தினமும் தாய் கீர்த்தனா தான் மகளை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார்.
- தன் கண் முன் மகள் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்தவர்கள் கண்களை குளமாக்கியது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் கீர்த்தனா. இவரது கணவர் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இந்த தம்பதியின் மகள் லியோரா ஸ்ரீ (வயது 10) இவர் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தினமும் தாய் கீர்த்தனா தான் மகளை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார். இன்று காலை வழக்கம் போல அவர் மகளை மொபட்டில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றார்.
கோவிலம்பாக்கம் ரோட்டில் சென்றபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதில் கீர்த்தனா சென்ற மொபட்டும் சிக்கி நிலை தடுமாறியது. இதனால் மொபட் சரிந்ததால் அதன் பின்னால் பயணம் செய்த லியோராஸ்ரீ தவறி கீழே ரோட்டில் விழுந்தார்.
அந்த சமயம் பின்னால் வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கிய மாணவி லியோராஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
தன் கண் முன் மகள் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்தவர்கள் கண்களை குளமாக்கியது. சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்ததும் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவிலம்பாக்கம் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருவதாகவும் லாரிகள் போன்ற வாகனங்கள் தாறுமாறாக ஓடுவதால் இதுபோன்று விபத்துக்கள் நடந்து வருவதாகவும், இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தாயுடன் பள்ளிக்கு சென்றபோது மாணவி விபத்தில் உயிர் இழந்த சம்பவம் கோலிலம்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்