search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் தகவல்
    X

    நெல்லையில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் தகவல்

    • கனமழை, வெள்ளத்தால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
    • மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்படைந்த தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    மேலும், டோக்கன் பெற்றவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×