search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    • தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை
    • மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்தது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது.

    ஆனால், இன்று காலை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளது.

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×