search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?- நாளை தீர்ப்பு
    X

    செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?- நாளை தீர்ப்பு

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஜெயலில் உள்ளார்.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரை சட்டவிரோத பணப் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டபோது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரினார். சென்னை முதன்மை அமர்வு மன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். அப்போதும் ஜாமின் வழங்கப்படவில்லை. பின்னர் உச்சநீதிமன்றத்தில் நாடினார். அப்போதும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தனது வாதங்களை முன்வைத்தது.

    அதேபோல் ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

    நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20 முறைக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை திருத்தவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாததால் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபர்தான் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×