என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இறந்த மகனின் உடலை போலீசுக்கு தெரியாமல் வீட்டில் புதைத்த தந்தை- கொலை செய்யப்பட்டாரா?
    X

    இறந்த மகனின் உடலை போலீசுக்கு தெரியாமல் வீட்டில் புதைத்த தந்தை- கொலை செய்யப்பட்டாரா?

    • மணிகண்டனின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோனைக்காக அரசு ஆஸ்த்திரிக்கு அனுப்பினர்.
    • கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியாசக்தி மற்றும் போலீசார் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயில் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் மணி கண்டன் (வயது16). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த சாந்தி இறந்துபோனார்.

    இதைத்தொடர்ந்து ராஜி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மணி கண்டன் திடீரென இறந்து போனதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ராஜி தனது மகன் இறந்தது பற்றி அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசுக்கு தெரிவிக்காமல் வீட்டின் பின்புறத்திலேயே குழிதோண்டி புதைத்துவிட்டார்.

    இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் கவரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இன்று காலை மணிகண்டனின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோனைக்காக அரசு ஆஸ்த்திரிக்கு அனுப்பினர்.

    நேற்று இரவு ராஜிக்கும், அவரது மகன் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னரே மணிகண்டன் இறந்து உள்ளார். பின்னர் மணிகண்டனின் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறத்திலேயே ராஜி புதைத்து இருப்பது தெரிந்தது.

    எனவே மோதலில் மணி கண்டன் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ராஜியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போன்று இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மகன் மணி கண்டன் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால் உடலை புதைத்து விட்டதாக ராஜி கூறிவருகிறார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியாசக்தி மற்றும் போலீசார் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த மகனின் உடலை யாருக்கும் தெரியாமல் தந்தையே வீட்டின் பின்பகுதியில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×