search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்து விட்டது: விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு
    X

    சென்னையில் இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்து விட்டது: விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

    • முறையற்ற குடிநீர் வழங்கப்படும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும்.
    • சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை.

    விராலிமலை:

    புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் சுகாதாரத்துறை சுணக்கத்தில் உள்ளது. அரசு நிர்வாகம் செயல் இழந்து விட்டது. தேங்கியிருக்கும் மழை நீரால் மிகப்பெரிய நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, இறந்து கிடக்கும் பிராணிகளால் பெரிய அளவிலான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது,

    இயற்கை பேரிடர் என்பது ஒன்று தான், இயற்கை பேரிடரை எதிர்கொள்ள திறன் வேண்டும், மக்களுக்கு நம்பிக்கை என்பது அரசாங்கம் தான். ஆனால் தி.மு.க. அரசு இந்த இயற்கை பேரிடரை எதிர் கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது.

    தற்போதைய சூழலில் கூட சுகாதாரத்துறை ரொம்ப தாமதமாக இயங்குகிறது. சென்னை நகரில் பிளிச்சிங் பவுடர் கூட போடவில்லை.

    அதேபோல லாரிகளில் வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த இடத்திலும் அது கண்காணிக்கப்படுவதாக தெரியவில்லை.

    முறையற்ற குடிநீர் வழங்கப்படும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும். எந்த பேரிடர் வந்தாலும் நோய் தொற்று ஏற்படும் என்பது உலக நியதி. அதனை தடுக்க அரசு தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அரசு எதிர்கொள்ள எந்தவித திட்டமிடலையும் முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்து மக்களை ஏமாற்றி விட முடியாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கேள்வி கேட்க முடியும். இதில் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பயனில்லை. இனியாவது சுகாதாரத்துறை விழித்துக் கொண்டு சென்னையில் சுகாதாரத்தை பேணி காக்க முன்வர வேண்டும். குறிப்பாக குடிநீரில் குளோரின் கலந்து உள்ளதா? என்பதை சரி செய்து குளோரின் கலந்து பரிசோதனை செய்து அதன் பிறகு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இயற்கை பேரிடர்களின் அத்தியாவசிய பொருளாக உள்ள குடிநீர் மற்றும் பாலுக்கு எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லை. தற்போதைய தி.மு.க. அரசின் சரியான திட்டங்கள் இல்லாததால் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் தண்ணீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திறமையாக கையாளாத காரணத்தால் இத்தகைய நிலைமை சென்னையில் ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×