என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவள்ளுவரை கொண்டாடுபவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன்? கவிஞர் வைரமுத்து கேள்வி
    X

    திருவள்ளுவரை கொண்டாடுபவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன்? கவிஞர் வைரமுத்து கேள்வி

    • சனாதனம் என்பதும், சனாதன எதிர்ப்பு என்பதும் காலம் காலமான கருத்துருவங்கள்.
    • பிறப்பால் ஏற்றத் தாழ்வு உண்டு என்பது சனாதன கருத்து.

    சென்னை:

    சனாதன தர்மம் பற்றிய அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சனாதனம் என்பதும், சனாதன எதிர்ப்பு என்பதும் காலம் காலமான கருத்துருவங்கள். பிறப்பால் ஏற்றத் தாழ்வு உண்டு என்பது சனாதன கருத்து. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு. திருக்குறளைத்தான் உதயநிதி பேசி இருக்கிறார். திருவள்ளுவரை கொண்டாடுகிறவர்கள், திருக்குறள் பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன்? அரசியல்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×