என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். போல் இருக்காதீங்க -உதயநிதி ஸ்டாலின்
- உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.
- கள்ளக்குறச்சியில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பொது வாழ்க்கையில் மட்டுமல்ல குடும்ப வாழ்க்கையிலும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். போல் இருக்க கூடாது என்ற ரீதியில் உதயநிதி ஸ்டாலின் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்கிறார்.
அந்த வகையில் கள்ளக்குறச்சியில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, "மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியதோடு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். போல் இருந்து விடாதீர்கள்" என்று உதாரணம் காட்டியது மண்டபத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
Next Story






