search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என திருமாவளவன் கூறியது வரவேற்கத்தக்கது- விஜயபாஸ்கர் பேட்டி
    X

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என திருமாவளவன் கூறியது வரவேற்கத்தக்கது- விஜயபாஸ்கர் பேட்டி

    • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
    • தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியது மற்றும் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது திருமாவளவன் வாய் திறந்து பேசி இருப்பது பாராட்டுதலுக்கு உரியது.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை தி.மு.க.வினர் கொண்டாடுவதற்கு தார்மீக அடிப்படையில் உரிமை உள்ளதா, இல்லையா என்பது அவர்களின் மனசாட்சிக்கே தெரியும். ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தீர்ப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×