search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நன்றாக சாப்பிட்டு தெம்பாக போராடுங்கள்...
    X

    நன்றாக சாப்பிட்டு தெம்பாக போராடுங்கள்...

    • வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு செய்தார்.
    • தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு அளித்தார்.

    சென்னை:

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து தனியார் உர தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், வாயு கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு செய்தார். இதன்பின் தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு அளித்தார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடையே பேசிய சீமான், உண்ணாவிரத போராட்டத்தால் எந்த பயனும் இல்லை. நன்றாக சாப்பிட்டு தெம்பாக போராட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×