என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: சீமான்
- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது.
- என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. என்னுடைய திரைப்பட துறையில் இருந்து ஒருவர் வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனால் இதை நான் வரவேற்கிறேன். நாட்டில் சிறந்த பிரதமர் என்றால் அது விபிசிங் தான். அவர் 2 ஆண்டுகள் ஆண்டாலும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் சிறந்த ஆட்சியை தந்தார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு பா.ஜ.க., காங்கிரசை ஒரே கட்சியாத்தான் பார்க்கிறேன். நான் தனித்து தான் போட்டியிடுகிறேன். காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் உருவ படங்கள் கர்நாடாகவில் எரிக்கப்பட்டது. அதை கூட்டணி கட்சிகள் கண்டிக்கவில்லை. ஆதனால் நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்