என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்- பிரதமர் மோடி
- பொதுமக்களின் ஆரவாரத்தால் மோடியும் உற்சாகமானார்.
- இனி, தி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.
கோவை:
பிரதமர் மோடி கோவையில் நேற்று ரோடுஷோ மேற்கொண்டு பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் முன்பிருந்து அவர் வாகன பேரணியை தொடங்கினார். இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
பொதுமக்களின் ஆரவாரத்தால் மோடியும் உற்சாகமானார். இதனால் மோடியின் வாகனம் மெதுவாக வந்தது. 2 ½ கிலோ மீட்டர் தூரமுடைய ஆர்.எஸ்.புரம் வந்தடைய சுமார் ஒரு மணி நேரம் ஆனது. ரோடு ஷோ முடிந்த பின்னர் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கோவை சுற்றுப்பயணம் குறித்து பதிவிட்டார். அந்த பதிவு தமிழில் அமைந்திருந்தது. அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
கோவை மக்கள் என் மனதை வென்று விட்டார்கள். இன்று (நேற்று) மாலை நடந்த ரோடு ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை. தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தப்போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி, தி.மு.க.வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புகளில் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் ரோடுஷோ நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.
— Narendra Modi (@narendramodi) March 18, 2024
கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே. pic.twitter.com/kVOanvtbQ0
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்