search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் வழக்கு- ஐகோர்ட்டில் நாளை விசாரணை
    X

    பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் வழக்கு- ஐகோர்ட்டில் நாளை விசாரணை

    • ஐகோர்ட்டில் இன்று ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வழக்கு தாக்கல் செய்தார்.
    • 11-ந்தேதி பொதுக்குழு நடக்க உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரங்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோர்ட்டு அவமதிப்பு தொடர்பான விசாரணையை 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    விசாரணையின் போது வருகிற 11-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும்படி ஓ.பி.எஸ். தரப்பில் முறையிடப்பட்டது. அது தொடர்பாக தனி நீதிபதியை அணுகும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

    இதையடுத்து தனி நீதிபதியை அணுகுவது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் மூத்த வழக்கறிஞர் கள்கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டில் இன்று ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வழக்கு தாக்கல் செய்தார். அதில் 11-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவுக்கு தனக்கு நேற்று மாலைதான் அழைப்பு வந்ததாகவும் முறைப்படி பொதுக்குழு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அழைப்பு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 11-ந்தேதி பொதுக்குழு நடக்க உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.

    Next Story
    ×