search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாமானியர் நம்பிக்கையை காப்பாற்றுவதே நல்லாட்சியின் அடையாளம்.. மு.க. ஸ்டாலின்
    X

    சாமானியர் நம்பிக்கையை காப்பாற்றுவதே நல்லாட்சியின் அடையாளம்.. மு.க. ஸ்டாலின்

    • புகார் கொடுக்க வரும் மனுதாரர்களுக்கு வழிகாட்ட வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், எளியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை நாடக்கூடிய அரசாகும். காவல் நிலையத்தை நாடி வரும் சாமானியர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்."

    "ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களுக்கு வழிகாட்ட வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வரவேற்பாளர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். அவர்களை மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கை ஏற்படும்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×