என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தகுந்த நிதி தருவார்கள் என நம்புகிறோம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- நெல்லையில் மழையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- கால்நடைகளை இழந்தவர்களுக்கும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய் அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.
அதன்படி, இன்று நெல்லையில் மழையால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் கால்நடைகளை இழந்தவர்களுக்கும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 100 வருடத்திற்கு பிறகு இதுபோன்ற மழை பெய்துள்ளது. மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை குறித்த கேள்விக்கு, முதலில் பேரிடர் இல்லை என்றார். இப்போ பாதிப்பை பார்க்க வருகிறார்கள். பாதிப்பை பார்த்த பிறகு தகுந்த நிதி தருவார்கள் என நம்புகிறோம் என்றார்.






