என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பணியாற்றுவதால் அலுவல் சார்ந்த எந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை- அமைச்சர் பேட்டி
    X

    இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பணியாற்றுவதால் அலுவல் சார்ந்த எந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை- அமைச்சர் பேட்டி

    • ஈரோடு இடைத்தேர்தல் பொறுத்தவரைக்கும் அமைச்சர்கள் பணியாற்றினாலும் எந்த அலுவல் சார்ந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை.
    • அ.தி.மு.க 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை கூட உருவாக்கவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலக வரலாற்றிலேயே ஈரோடு மாநகராட்சிக்கு தனி வரலாறு இருக்கிறது . 1917-ம் ஆண்டு தந்தை பெரியார் ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததை 2008-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் கருணாநிதி மாநகராட்சியாக தரம் உயர்த்தினார்.

    அதற்கு பின் வந்த ஆட்சியாளர்களால் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. மீண்டும் தற்பொழுது தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்த மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கொண்டு வருவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்திற்கு 22 மருத்துவமனைகள் முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 13 மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான பணிகளை செய்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது நகைப்பிற்குரியது. அவர் சொல்வது அனைத்தும் மக்களுக்கு பொய் என தெரியும்.

    ஈரோடு மாநகராட்சி புறக்கணிக்கப்பட்ட மாநகராட்சியாகவே தொடர்ந்து இருந்தது. 10 ஆண்டு காலம் புறக்கணிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ரூ.480 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார்.

    ஈரோடு இடைத்தேர்தல் பொறுத்தவரைக்கும் அமைச்சர்கள் இங்கு பணியாற்றினாலும் எந்த அலுவல் சார்ந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை. அ.தி.மு.க 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை கூட உருவாக்கவில்லை. இது குறித்து பேச எடப்பாடி பழனிசாமி தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×