search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் 15 நாளில் தொடங்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
    X

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் 15 நாளில் தொடங்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

    • பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, “தளவாடி மலைப்பகுதி மக்களுக்கு புதிய குடிநீர் திட்ட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
    • கோரிக்கையும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் உள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும், அதனை நிறைவேற்ற வலியுறுத்தியும், கோரிக்கைகளை வைத்தனர்.

    கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன் வருமா? நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்பது போன்ற கோரிக்கைகளை எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "இந்த கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்றும்" என்று தெரிவித்தார்.

    பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, "தளவாடி மலைப்பகுதி மக்களுக்கு புதிய குடிநீர் திட்ட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த கோரிக்கையும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் (அ.தி.மு.க.), "அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ரூ.1650 கோடியில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    தற்போது 91 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. எப்போது அந்த திட்டம் மக்கள் பயனடையும் வகையில் தொடங்கி வைக்கப்படும்" என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள போதிலும் காளிங்கராயன் அணையில் இருந்து 1.5 டி.எம்.சி. தண்ணீரை வரவழைக்க வேண்டி உள்ளது.

    தற்போது அணையில் தண்ணீர் இல்லாததால் தாமதமாகி உள்ளது. இருப்பினும் இன்னும் 15 நாளில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்" என்றார்.

    Next Story
    ×