search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எங்கள் பூரணம் அம்மா- அமைச்சர் அன்பில் மகேஷ் டுவிட்
    X

    எங்கள் பூரணம் அம்மா- அமைச்சர் அன்பில் மகேஷ் டுவிட்

    • வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும் , விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம்.

    சென்னை:

    நாடு முழுவதும் 75-வயது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலை உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இதன்பின்னர் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும் , விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் அரசு பள்ளி கட்டுவதற்காக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்நிலையில், பள்ளக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம். கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம். எங்கள் பூரணம் அம்மா' என பதிவிட்டு குடியரசு தின விழாவில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×