search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரசாரத்தை தனியாக தொடங்க உள்ளேன்- மன்சூர் அலிகான்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிரசாரத்தை தனியாக தொடங்க உள்ளேன்- மன்சூர் அலிகான்

    • காத்திருந்தால் காலங்கள் ஓடி விடும்.
    • பேச்சுவார்த்தை நடப்பது போல் நடக்கட்டும்.

    சென்னை:

    நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் நேற்று தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவுகள் சரிவர அமையாத சூழலில் மேலும் ஒரு பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் இன்று மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணியில் ஒரு சீட் நாங்கள் போட்டியிட கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

    மேலும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி பற்றி பேசி வருகிறோம். காத்திருந்தால் காலங்கள் ஓடி விடும். பேச்சுவார்த்தை நடப்பது போல் நடக்கட்டும். நான் தேர்தல் பணிகளை இன்று முதல் தனியாக தொடங்க இருக்கிறேன். இன்று தேர்தல் பணிக்காக வேலூர் செல்கிறேன்.

    நான் சாதாரண கிள்ளுக் கீரை கிடையாது. சினிமாவிலும் அரசியலிலும் 40 ஆண்டு காலமாக இருக்கிறேன் என்று கூறினார்.

    Next Story
    ×