search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அனைவருக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு: கனிமொழி
    X

    அனைவருக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு: கனிமொழி

    • மத ரீதியான கலவரம் என்றாலும், மணிப்பூர் கலவரமாக இருந்தாலும் இன்றுவரை மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான்.
    • அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறோம்.

    சென்னை:

    சென்னையில் நடைபெறும் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு குறித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றம், பெண்களுக்கான அங்கீகாரம், பெண் கல்வி என்று தன் ஆட்சி பொறுப்பில் இருக்க கூடிய அந்த கால கட்டத்தில் பல்வேறு திட்டங்களை அதற்காக கொண்டு வந்த தலைவர் கலைஞர்.

    அவரது நூற்றாண்டில், இப்போது தேர்தல் அடுத்த ஆண்டு வரக்கூடிய இந்த நேரத்தில் சரி பாதியாக இருக்கக் கூடிய பெண்கள் தங்களுடைய கருத்துக்களை தங்கள் குரலைபதிவு செய்யக்கூடிய ஒரு மாநாடாக, அவர்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கக்கூடிய ஒரு இடமாக இந்த மாநாடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வில் உள்ள பெண்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

    மத ரீதியான கலவரம் என்றாலும், மணிப்பூர் கலவரமாக இருந்தாலும் இன்றுவரை மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். எனவே அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×