search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருத்தாசலத்தில் கந்து வட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    விருத்தாசலத்தில் கந்து வட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை

    • தினேஷ் குமாரை அவரது மனைவிக்கு போன் செய்ய சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
    • கந்து வட்டி கும்பல் திட்டியதால் வேதனை அடைந்த செல்வி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (29). இவர் சி.சி.டி.வி. விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. பெண் குழந்தை உள்ளது. தினேஷ் குமார் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முருகனிடம் வட்டிக்கு பணம் வாங்குவது வழக்கம். ஏற்கனவே பணம் வாங்கி அதனை வட்டியுடன் கட்டி உள்ளார்.

    தற்போது தினேஷ் குமார், முருகனிடம் ரூ. ஒன்றரை லட்சம் பணம் கடனாக வாங்கி இருந்தார். அதற்கு வாரம் ரூ. 6 ஆயிரம் கட்ட வேண்டும் என முருகன் கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தினேஷ்குமாரால் பணம் கட்ட தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேர் கும்பல் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தினேஷ் குமாரை அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

    பின்னர் தினேஷ் குமாரை அவரது மனைவிக்கு போன் செய்ய சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

    பின்னர் தினேஷ் குமாரை விடுவித்தனர். கந்து வட்டி கும்பல் திட்டியதால் வேதனை அடைந்த செல்வி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கந்து வட்டி கும்பல் திட்டியதால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×