என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.கவை அப்புறப்படுத்த இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்துள்ளது- திருமாவளவன்
    X

    பா.ஜ.கவை அப்புறப்படுத்த இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்துள்ளது- திருமாவளவன்

    • 5 மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்.
    • கவர்னர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவரது அரசியலமைப்பு சட்டவிரோத போக்கை உணர்த்துகிறது.

    கோவை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க கூட்டணி தலைவர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

    இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்த மாநாடு அமையும்.


    நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு சாதமாக வந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்புகிறேன். கர்நாடக தேர்தலில் மக்கள் பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டியது போல 5 மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள்.

    இந்தியா கூட்டணி, பா.ஜ.கவை அப்புறப்படுத்த ஒருங்கிணைத்துள்ளது. தி.மு.க அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் பல்கலைக்கழகம் தொடர்பாக 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட நிலையில் கவர்னர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது அவரது அரசியலமைப்பு சட்டவிரோத போக்கை உணர்த்துகிறது.

    ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் இந்திரா நகரில் ஜாதி வெறியர்களால் சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×