search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆர்.எஸ்.எஸ். மனுவை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு
    X

    ஆர்.எஸ்.எஸ். மனுவை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு

    • கோர்ட்டு உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று வக்கீல் ரபு மனோகர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.
    • வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி கடந்த 16-ந்தேதி காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கோர்ட்டு உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று வக்கீல் ரபு மனோகர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி பின்னர் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×