search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாள சீரமைப்பு பணிகள் தீவிரம்
    X

    நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாள சீரமைப்பு பணிகள் தீவிரம்

    • தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது.
    • தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது.

    குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து செல்லப்பட்டு சேதமடைந்தது.

    இதனால் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடத்திலும், தாதன்குளம் பகுதியில் ஒரு இடத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் வரையிலான ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.


    இந்த பகுதியில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது. தண்டவாளத்தை ஒட்டியுள்ள மின் கம்பிகள் அனைத்துமே சாய்ந்து வயல்வெளிகளில் கிடக்கின்றன. அவற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    முதல்கட்டமாக ரெயில்வே அதிகாரிகள் செய்துங்கநல்லூர் மற்றும் தாதன்குளம் பகுதியில் தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களும் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×