search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. பிரசார கூட்டத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
    X

    தி.மு.க. பிரசார கூட்டத்தை தடுத்து நிறுத்திய போலீசார்

    • தி.மு.க.வினர் தாங்கள் போலீசாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
    • தி.மு.க.வினருக்கும் தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக என். புதுப்பட்டியில் நிதிநிலை அறிக்கையின் தெருமுனை பிரசாரக் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

    இதை அறிந்த நிலக்கோட்டை தொகுதி பறக்கும் படை அதிகாரி பிரவீன் தலைமையில் அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் ஆணையம் அனுமதி பெறாமல் கூட்டம் நடப்பதாக கூறி அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    ஆனால் தி.மு.க.வினர் தாங்கள் போலீசாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் கூட்டம் நடத்தக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தி.மு.க.வினருக்கும் தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டம் விரைவாக முடிக்கப்பட்டது.

    Next Story
    ×