search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்...
    X

    இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்...

    • பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு!
    • முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்!

    சென்னை:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்டோரும் உலகளவில் 2 லட்சத்துக்கும் மேலானோரும் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் இந்நாள் சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    அந்த வகையில் இன்று 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பல்லாயிரம் பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டு, தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு!

    சுனாமியால் உயிரிழந்தோரை நினைவில் ஏந்தி, காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்! அதன் முதல்படியாக இயற்கையைக் காக்க உறுதியேற்போம்! என கூறியுள்ளார்.

    Next Story
    ×