search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்
    X

    குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    • மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி விபத்து குறித்து அறிந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்.

    காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    Next Story
    ×