search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தடையை மீறி போராட்டம்: சட்டசபையில் நீதி வேண்டும்- அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கம்
    X

    தடையை மீறி போராட்டம்: சட்டசபையில் நீதி வேண்டும்- அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கம்

    • சென்னை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.
    • தடயை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். காவல்துறை தடையை மீறி உண்ணாவிரதமிருக்க பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்துள்ளனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் முனுசாமி, செங்கோட்டையின், அரக்கோணம் ரவி, உதயகுமார், தங்கமணி, கோவிந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் வந்துள்ளனர்.

    சென்னை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.

    சட்டசபையில் ஜனநாயக படுகொலை நடந்ததாக கூறி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளனர்.

    அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×