என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு நாளை கூடுகிறது
- கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்து நாளை ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- கடந்த வாரம் தேர்தல் அறிக்கைக் குழு கூடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குழு நாளை முதல் முறையாக கூடுகிறது.
கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்து நாளை ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தேர்தல் அறிக்கைக் குழு கூடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story






