search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலூர்-விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    கடலூர்-விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

    • விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டு கொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.

    விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×