search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் ஒரே ஆண்டில் ரெயில்வே பொருட்களை திருடியதாக 70 பேர் கைது
    X

    சேலம் ரெயில்வே கோட்டத்தில் ஒரே ஆண்டில் ரெயில்வே பொருட்களை திருடியதாக 70 பேர் கைது

    • கஞ்சா, போதை புகையிலை பொருட்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை கடத்தியாக 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • போலி ஏஜெண்டுகளை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து நடப்பாண்டு ஆகஸ்டு வரையிலான ஓராண்டு காலத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் , கரூர் உள்பட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையங்களில் விதி மீறிய குற்ற செயல்களுக்காக 5,317 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர்களிடம் இருந்து விதி மீறலுக்காக ரூ. 41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில்வே பொருட்களை திருடியதாக 70 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 4.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.

    சேலம் கோட்டம் வழியாக சென்ற ரெயில்களில் கஞ்சா, போதை புகையிலை பொருட்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை கடத்தியாக 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் முறைகேடாக டிக்கெட் புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் போலி ஏஜெண்டுகளை ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் முறைகேடு டிக்கெட் புக்கிங் தொடர்பாக வந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதில் 68 போலி டிக்கெட் ஏஜெண்டுகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26.51 லட்சம் மதிப்புள்ள ரெயில் டிக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

    போலியாக பல ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகளை வைத்து கொண்டு பல்வேறு பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்றதாக ஓராண்டில் இந்த 68 பேரும் கைதாகி உள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×