என் மலர்
தமிழ்நாடு

மாதவரத்தில் கார் விற்பனை மையத்தில் திருட்டு- மும்பை கொள்ளையர்கள் 3 பேர் அதிரடி கைது
- கொள்ளைகும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
- கைதான கொள்ளையர்கள் 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாதவரம்:
மாதவரம், கொளத்தூர் 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான கார் விற்பனை மையங்கள் வரிசையாக உள்ளன. இந்த கார் விற்பனை நிலையங்களில் பல உயர்ரக கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 9-ந்தேதி இங்குள்ள 3 கார் விற்பனை மையங்களில் அடுத்தடுத்து பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது. மொத்தம் ரூ. 2லட்சத்து 58 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது. மேலும் ஒரு கார் நிறுவனத்தில் இருந்து பணப் பெட்டியை உடைக்க முடியாததால் அப்படியே தூக்கி சென்று ரெட்டேரி ஏரிக்கரையில் வீசி சென்று இருந்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தினர். கொள்ளைகும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவத்தன்று அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு மேமரா பதிவு மற்றும் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போது கொள்ளையில் ஈடுபட்டது மும்பையை சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி விட்டு மும்பைக்கு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்து சென்று கொள்ளையில் ஈடுபட்ட பப்பு சவுகான், சாம் ராவ் ஜாதவ், கரண் பவார் ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து வந்தனர்.
இந்த கொள்ளையில் மேலும் 2 பேர் தலைமறைவாக இருப்பதும், கொள்ளையில் தொடர்புடைய 3 பேர் வேறொரு வழக்கில் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் தெரிய வந்தது.
கைதான கொள்ளையர்கள் 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.