search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டால் தி.மு.க.வினர் அரசை காப்பாற்றிக் கொள்ளலாம்- எச்.ராஜா
    X

    ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டால் தி.மு.க.வினர் அரசை காப்பாற்றிக் கொள்ளலாம்- எச்.ராஜா

    • உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆளுநர் உரையில் கூறிவிட்டு படிக்கச் சொன்னால் ஆளுநர் எப்படி படிப்பார்.
    • ஆளுநரை எதிர்த்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக ஆளுநருக்கு அரசு அனுப்பிய உரையில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் கஞ்சா அதிகமாக பிடிப்படுகிறது. கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பிரமுகர்களின் 18 பேர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இப்படி பல சம்பவங்கள் நடந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

    தமிழகம் அந்நிய முதலீட்டை அதிகமாக ஈர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் கடந்த ஆண்டு 18 பில்லியன் டாலரும், மகாராஷ்டிராவில் 11.6 பில்லியன் டாலரும் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு 2.5 பில்லியன் டாலர் மட்டுமே அந்நிய முதலீடு வந்துள்ளது.

    இவ்வாறாக உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆளுநர் உரையில் கூறிவிட்டு படிக்கச் சொன்னால் ஆளுநர் எப்படி படிப்பார். தொடர்ந்து ஆளுநரை கண்டித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆளுநரை கண்டித்து பேசக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். நிலைமையை புரிந்ததனால் முதல்வர் அவ்வாறு கூறியுள்ளார்.

    தொடர்ந்து ஆளுநரை எதிர்த்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். திமுகவினர் ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்களது அரசை காப்பாற்றிக் கொள்ளலாம்.

    திருமாவளவன் நடத்திய பேரணிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் ஆர்எஸ்எஸ் நடத்தும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சித்திரை தான் நமக்கு தமிழ் புத்தாண்டு. பொங்கல் பண்டிகை இந்துக்கள் பண்டிகை. இது நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மஞ்சுவிரட்டு, ஏர் தழுவுதல் எல்லாம் நமது பாரம்பரிய விழாக்கள் ஆகும்.

    இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

    Next Story
    ×