search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாயை கொலை செய்து வீட்டில் புதைத்த மகன்: கஞ்சா போதையில் வெறிச்செயல்
    X

    தாயை கொலை செய்து வீட்டில் புதைத்த மகன்: கஞ்சா போதையில் வெறிச்செயல்

    • தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
    • கஞ்சா போதையில் தாயை அடித்து கொன்று புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் சேவாக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (45) கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்களது பெரிய மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் சேவாக் (வயது 21) போக்சோ வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்தார். தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் கடந்த 21-ந் தேதியன்று கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    வீட்டிலிருந்த கஸ்தூரியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தராததால் சேவாக்கிற்கும் கஸ்தூரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தாய், மகன் இருவரையும் காணவில்லை. அவர்களது வீடும் பூட்டியிருந்தது. அவர்களது உறவினர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டிற்குள் கஸ்தூரியின் உறவினர்கள் சென்றனர். அங்கிருந்த பாயில் ரத்தக்கரை படிந்திருந்தது. அதற்கடியில் பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இது குறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

    மேலும், கஞ்சா போதையில் தாயை அடித்து கொன்று புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் சேவாக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×