என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விருதுநகர், ராமநாதபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
    X

    விருதுநகர், ராமநாதபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    • நெல்லை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • கனமழையால் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை காரணமாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×