search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு: கல்வித்துறை தகவல்
    X

    மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு: கல்வித்துறை தகவல்

    • மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள்.

    சென்னை:

    மழை காலங்களின்போது, பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் எடுக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அந்தவகையில் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், எந்தெந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது? என்ற முன்னெச்சரிக்கையின்படி, முந்தைய நாளோ அல்லது மழை பெய்யக்கூடிய நாளில் காலையிலோ விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் கல்வித்துறை சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி மாணவ-மாணவிகளுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. சமீபத்தில் மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள்.

    நேற்று கூட கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையையொட்டிய சில பகுதிகளும் வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பங்களுக்கெல்லாம் விரைவில் தீர்வு காணும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×