என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மழை பாதிப்பு: கூடுதல் அமைச்சர்கள் நியமனம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மழை பாதிப்பு: கூடுதல் அமைச்சர்கள் நியமனம்

    • 4 மாவட்ட மீட்புப் பணிகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகளாக நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
    • மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த இன்று கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

    4 மாவட்ட மீட்புப் பணிகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகளாக நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

    கன்னியாகுமரி-நாகராஜன், நெல்லை-செல்வராஜ், தூத்துக்குடி-ஜோதி நிர்மலா, தென்காசி-சுன்சோங்கம் ஜதக் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    களத்தில் ஏற்கனவே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளனர்.

    இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த இன்று கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பன், மூர்த்தி ஆகியோரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×