search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் முதல் ஆளாக நின்று வாக்களித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள்
    X

    தமிழகத்தில் முதல் ஆளாக நின்று வாக்களித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள்

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

    அந்த வகையில், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி வாக்களித்தார்.

    தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்களித்தார்.

    தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் காலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    சிவகங்கை தொகுதியில் உள்ள கண்டனூர் வாக்குச்சாடியில் முன்னால் அமைச்சர் ப. சிதம்பரம் வாக்களித்தார்.

    தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார்.

    திருச்சி தில்லைநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார்.

    சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரேமலதா மற்றும் விருதுநகர் தேமுதிக தொகுதி வேட்பாளர் விஜயபிரபாகரன் வாக்களித்தனர்.

    Next Story
    ×