என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பழனிசாமி பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
- வருகிற 5-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் கவுந்தம்பாடி, இரவு 7 மணிக்கு ஈரோடு பூந்துறை ரோடு, கஸ்பா பேட்டை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
- 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் வருகிற 5-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.
வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் கவுந்தம்பாடி, இரவு 7 மணிக்கு ஈரோடு பூந்துறை ரோடு, கஸ்பா பேட்டை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டம், மாலை 5.30 மணிக்கு தியாகதுருகம், கள்ளக்குறிச்சியிலும், இரவு 7 மணிக்கு ராணிப்பேட்டை எம்.ஜி.ஆர். திடல், ஆத்தூர் ஆகிய பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்