search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்றத் தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து 10 பேர் குழு ஆலோசனை
    X

    பாராளுமன்றத் தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து 10 பேர் குழு ஆலோசனை

    • முதல் கட்டமாக இன்று தேர்தல் அறிக்கைக் குழு அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கூடியது.
    • எத்தனை பக்கங்கள் கொண்டதாக அறிக்கை இடம் பெற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை போன்ற பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக் குழு, விளம்பரக் குழு, தொகுதி பங்கீட்டு குழுக்கள் அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து முதல் கட்டமாக இன்று தேர்தல் அறிக்கைக் குழு அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கூடியது.

    அக்குழுவில் இடம் பெற்றுள்ள தலைமை நிர்வாகிகள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகை செல்வன் ஆகிய 10 பேர் கூடி ஆலோசித்தனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறக்கூடிய வகையிலான திட்டங் களை தேர்தல் அறிக்கையில் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    தேர்தல் அறிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாரிப்பது குறித்து பேசினார்கள். எத்தனை பக்கங்கள் கொண்டதாக அறிக்கை இடம் பெற வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

    பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதன் முறையாக பாராளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க. சந்திக்க இருப்பதால் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×