என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி: 12 பேர் காயம்
    X

    சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி: 12 பேர் காயம்

    • படுகாயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் எடக்காடு காலனியை சேர்ந்தவர் ராசன் 65) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இறந்தார். இவரது உடல் பாசூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்காக இவரது உறவினர்கள் பலர் தகனம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தகனம் முடிந்ததும் உறவினர்கள் அனைவரும் ஒரு சரக்கு வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள தோட்டத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் எடக்காடு காலனியை சேர்ந்த பழனி சாமி, முருகன் (61), கண்ண ம்மாள் (60), சரவணன் (55), சாந்தி (45), பாப்பாத்தி (40), மாதம்மாள் (55), பரமேஸ்வரி (32), சண்முகம் (65), மல்லிகா (55), பழனியம்மாள் (65), சொர்ணம்மாள் (55), குழந்தைசாமி மூர்த்தி (48) ஆகிய 13 பேர் படுகாயமடைந்தனர்.

    இதையடுத்து படுகாயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய பழனிசாமியை கணபதி பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    படுகாயம் அடைந்த மற்ற 12 பேர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×