என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மூர் மார்க்கெட் - அரக்கோணம் மின்சார ரெயில் பகுதி நேர ரத்து
- ரெயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சில மின்சார ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை:
பயணிகள் வசதிக்காகவும், ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) காலை 11.10 மணி முதல் மதியம் 1.10 மணி வரை (2 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மூர் மார்க்கெட்டில் (சென்னை சென்டிரல்) இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.10, 10, 11 ஆகிய நேரங்கில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மேலும், அரக்கோணத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 11.15 மற்றும் மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் மின்சார ரெயில் அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருவள்ளூரில் இருந்து புறப்படும்.
இதேபோல, திருத்தணியிலிருந்து இன்று (புதன்கிழமை) மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் மின்சார ரெயில் திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருவள்ளூரில் இருந்து புறப்படும். மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் மூர் மார்க்கெட் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






