search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு எச்சரிக்கை: சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின்
    X

    பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு எச்சரிக்கை: சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின்

    • சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
    • சண்டிகர் மேயர் தேர்தலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

    புதுடெல்லி:

    சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

    இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சட்டத்தின் கலங்கரை விளக்கம் என முதலமைச்சர் முகஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தி நியாயத்தை சுப்ரீம் கோர்ட் நிலைநிறுத்தியுள்ளது.

    ஒருமைப்பாடு, ஜனநாயகக் கொள்கைகளுக்கான இந்த வெற்றி இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு மகத்தான செய்தி.

    2024 தேர்தலுக்கு முன் பாஜகவின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு முன் எச்சரிக்கையை அனுப்பியுள்ளது சுப்ரீம் கோர்ட் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×